சிவப்ரியன்

லெமன் ட்ரீயும்,இரண்டு ஷாட் டக்கீலாவும் -ஒரு பகிர்வு

7

| Posted in | Posted on 12:11 PM

நான் பொதுவாய் நிறைய புத்தகங்கள் வாங்குவதுண்டு!
சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய உடனேயே படித்துவிடுவேன்.
பல புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே தூங்கிக்கொண்டிருக்கும்.
இன்றாவது படித்துவிட வேண்டும் என தினமும் நினைத்தாலும் கூட, சில மாதங்களுக்குப் பின்பே அந்த வாய்ப்பு கிட்டும்.

ஆனால் எனது பாட்டி (செஞ்சுரி அடிக்கப்போகிற வயசு)
இன்றும் நிறைய படிப்பார்.
நான் வாங்கி கிடப்பில் போட்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் அவர்தான் முதலில் படிப்பார். (சில புத்தகங்கள் விதிவிலக்கு)

எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்றால்,
சென்ற வாரம் வாங்கிய கேபிள் சங்கரின்  புத்தகத் தலைப்பிற்கு,
என்னை மொழிபெயர்ப்பாளன் ஆக்கிய "கொடுமை" அவரையே சேரும்.

பாட்டி : என்ன பேரு இது? "லெமன் ப்ரீயும், இரண்டு ஷாப் பக்கீலாவும்?"

நான் : அது "ப" இல்ல "ட". "லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்".

பாட்டி : சரி அப்பிடீன்னா?

நான் : ம்ம்ம்ம்...... "எலுமிச்சை மரமும், இரண்டு கோப்பை மதுவும்" .

(என்ன கொடுமை சார் இது?)

(என்ன நினைத்தாரோ இதுவரை அந்த புத்தகத்தை தொடக்கூட இல்லை. ஒருவேளை "ஸீரோ டிகிரி" பாதிப்பாய்க்கூட இருக்கலாம்.)

ஒருவேளை இது சினிமா தலைப்பாக இருக்கும் பட்சத்தில், (இப்போ வேண்டாம்; இந்த விசயத்துக்கு கடைசியில் வருவோம்.)

லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
ஆசிரியர் : சங்கர் நாராயண்
பதிப்பு : நாகரத்னா பதிப்பகம்
விலை : ரூ 50௦/-
கிடைக்குமிடம் :  டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை, முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர், சென்னை –78
மேலதிக விபரங்களுக்கு,
கேபிள் சங்கர் : 9840332666
http://cablesankar.blogspot.com/


 
முதல் கதையிலேயே பிரமித்துப்போய், அதே உற்சாகத்தோடு, ஒரே மூச்சில் முழுவதும் படித்து முடித்த பின்பே கீழே வைத்தேன்.

சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, தேர்ந்த எழுத்து நடை. வாழ்த்துக்கள் சங்கர்ஜி.

புத்தகத்தை நிறைய பேர் துவச்சு, பிழிஞ்சு, கடைசியில் இஸ்திரி வேறு போட்டு விட்டதால், புதிதாய் நான் சொல்வதற்கு....,

எங்கே ஆரம்பித்து, எங்கே முடிக்க வேண்டும் என்கிற சூட்சமம் தெரிந்து வைத்திருக்கின்றார். கதையை நகர்த்தும் விதமும், வார்த்தைகளைக் கையாண்ட விதமும் அழகு.


எனக்குப்பிடித்த கதைகள்,
1. முத்தம்.
2. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
3. ராமி, சம்பத், துப்பாக்கி.
4. போஸ்டர்.
5. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
6. தரிசனம்.
7. காமம் கொல்.


1. முத்தம்.
எனக்கு மிகவும் பிடித்த கதை. 
ஒரு வித பதட்டத்துடனே கதையோடு பயணிக்க வேண்டியிருந்தது. கதாபாத்திரங்களையும் அதன் உணர்வுகளையும் அழகாய் செதுக்கியிருக்கிறார்.    
கதை நகரும் விதமும், முடிவும் மிக அருமை.

2. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
வாழ்க்கைத்தத்துவம்.  
ஓஷோவின் "இதுவும் உன்னைக் கடந்துவிடும்" டைப். ஆனால் இவருக்கே உண்டான பாணியில் பயணிக்கிறது. 
(நகரத்து ஆண்கள் / இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு புரியும். ஆனால், மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் கிராமத்து தமிழாசிரியருக்கோ, சாதாரண வாசகிக்கோ புரிவது மாதிரி எனக்கு தெரியவில்லை.) 

3.கல்யாணம்
காமக்கதை முதல் பகுதி. (பதின் வயதிலிருக்கும் ஆண்கள் ரசிக்க வாய்ப்பிருக்கிறது.) 

4. ஆண்டாள்
கடைசியில் வழக்கம்போல ட்விஸ்ட் வைக்க நினைத்து, எங்கோ சறுக்கியதாக தெரிகிறது. மனதில் ஒட்டவில்லை.    

5. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
இரண்டு முடிவுகளும் எதிர்பாராதது. அதிலும் முதல் கிளைமாக்ஸ் நெகிழ வைக்கிறது. சூப்பர்.!

6. தரிசனம்.
ஆன்மீக அனுபவம், வேறு கோணத்தில். 
நீங்கள் படிக்கும் இடம், வயது, உங்கள் சூழ்நிலையைப் பொருத்து உங்கள் எண்ணம் வேறுபட வாய்ப்பிருக்கிறது. 

7. போஸ்டர்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் அந்தந்த இடத்துக்குண்டான சம்பவங்களை விவரிக்கிறார்.அனால் கிளைமாக்ஸ் சஸ்பென்சை வேறு ஒரு இடத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள் .  (கிட்டத்தட்ட ராஜேஷ்குமார் நாவல் மாதிரி உணர்கிறேன்.)      

8. துரை..நான்..ரமேஷ் சார்.
ஒரு நடிகையின் கதை அல்ல. பல பெண் ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் கதை. பொதுவான கோடம்பாக்க கதை. 

9. என்னை பிடிக்கலையா?
காமக்கதை இரண்டாம் பகுதி. (பிட்டுப் பட ப்ளாஷ் பேக் கதை.)

10. காமம் கொல்.
தாம்பரத்துக்குப் பக்கத்தில் நடந்ததாக எப்போதோ நக்கீரனில் படித்த ஞாபகம்.ஆனால் மிகவும் ரசிக்கும் படியாக இனிப்பு தடவி தந்திருப்பது மிக அருமை.   

11. ராமி, சம்பத், துப்பாக்கி.
யூகிக்க முடியாத திருப்பம். (டுஸ்யாங்... , டுமீல்... - படித்து அனுபவிக்க வேண்டிய இடம்.)        
பேசிக்கொள்ளும் வார்த்தைகளைக்கூட எண்ணி எண்ணி சேர்த்திருக்கிறார்.

12. மாம்பழ வாசனை
குடைக்குள் மழை மாதிரி எதோ நடப்பதாய்த் தெரிகிறது; கடைசியில் டாக்டர் ருத்ரனும் விளக்கமளிக்காததால்... :-(
ஒருவேளை எனக்கு புரிந்து கொள்கிற பக்குவம் இல்லாமல் கூட இருக்கலாம்.
  
13. நண்டு
எதார்த்தம். எதோ மிஸ்ஸிங். 


மேலே இருப்பவை மட்டும் படிக்காமல், புத்தகத்தையும் வாங்கி (ஓசியில் அல்ல)
எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  

இணைய பயனாளிகள் / பதிவர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அதிக வாசகர்களை சென்றடையும் வகையில் புத்தகமாய் அச்சில் கொண்டுவந்த கேபிளாருக்கும், பதிப்பகத்தாருக்கும், உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இப்ப நம்ம மொக்கை,


ஒருவேளை இது சினிமா தலைப்பாய்  இருக்கும் பட்சத்தில்...
அல்லது செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு..
(உக்காந்து யோசிச்சது தான்...)


கே.மு.க.ம. கட்சித் தொண்டர்கள் தலைப்பை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்தலாம்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கில் பெயர் வைத்திருப்பதாக படைப்புகளுக்கு தடை வரலாம்.

தமிழ்நாட்டில் புத்தகம் வெளியிடுவோர், கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என உத்தரவு வரலாம்.

அல்லது தமிழில் பெயர் வைப்போரின் புத்தகங்களுக்கு வரி விலக்கு / இன்ன பிற சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

......... இயக்கத்தின் சார்பில் ஆட்டோ வரலாம்.

போ.க.ம மகளிர் அமைப்புகள் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது என உண்ணாவிரதம் இருக்கலாம்.

எலுமிச்சை மரமும், ....  -என  பெயர் மாற்றம் செய்யப்படலாம்.

புதிதாய் கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்பு கூட வரலாம்.

சரி கேபிளுக்கு தமிழில் என்ன பேரு? (சும்மா லுல்லுல்லுலாயிக்கு!)

Comments (7)

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி..இன்னும் விளக்கமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

கேபிள் சங்கர்

கண்டிப்பாய் போட்டுருவோம் தல..

about parisal when?

what abot parisal?

"டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" தானே,
இன்னும் படித்து முடிக்க வில்லை...
பரிசல மட்டும் விட்டுடுவமா என்ன?

நல்லா எழுதுறீங்க சிவா... அருமை.. தொடரவும்!!!

வாழ்த்துக்களுடன்...
கார்த்திகேயன் (3ஐ!!!)
http://kaaranam1000.blogspot.com

தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்தி.

கருத்துரையிடுக