| Posted in
அறிவிப்பு
| Posted on
1:19 PM
தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை
நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).
இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
.
| Posted in
கவிதை
| Posted on
5:07 PM
பெண்ணியவாத தோழி ஒருத்தி
கவிதை ஒன்று வரைந்தாள்.
விந்து, யோனி, புணர்ச்சி
எந்த வார்த்தைகளுமில்லை.
பெரிய தலைவனின்
"குறி"ப்புகளில்லை.
கடவுள் எவனும்
உடைபடவில்லை.
ஆடவரை இழிவுசெய்யும்,
மடமையுமில்லை.
உச்சகட்ட போதையின்
உளறல்கூட இல்லை.
ஏற்க முடியவில்லை.
நவீன பெண்ணியக் கவிதை.
கருத்தாழத்தோடு இருக்கிறதாம்,
முகம் சுளிக்காமல் படிக்கலாமாம். - என
என்னென்னவோ சொன்னாள்.
ஆனால்,
நவீன பெண்ணியத்தில்,
பாவம் என் தோழியின்,
"பேனா விலைபோகலை".
.
| Posted in
பதிவுலகம்
| Posted on
12:19 AM
சென்னை பதிவர்கள் சந்திப்பு - 10 ஏப்ரல் 2010.
என்னிடம் வித்தியாசமான ஒரு கெட்ட பழக்கம் உண்டு. இத்தனை மணிக்கு வரவேண்டுமென்றால் 20 - 30 நிமிடத்திற்கு முன்பே அங்கே சென்றுவிடுவேன். அப்படியே ஆனது சென்ற சனிக்கிழமை மாலை,
ஆம், மெரீனா கடற்கரைச் சாலை...
பா.ஜ.க வின் கொடிகளைத் தாங்கி நிறைய வண்டிகள்..ஏதேனும் பொதுக்கூட்டமா அல்லது வாரக்கடைசி என்பதாலா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சென்னையின் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு... அல்லது உக்கிரத்தைத் தணிக்கும் இடமாக... (அட வெய்யில சொல்றேங்க.) இருக்கிறது ஆசியாவின் நீண்ட கடற்க்கரை.
காந்தி சிலை.
மாலை வெய்யிலால் கறுப்பு காந்தி பொன்னிறமாய் மாறிக்கொண்டிருந்தார். ஆனால் அண்ணன் தண்டோரா பளிச்சென்று தெரிந்தார் (சட்டை நிறம்) கூடவே சிவராமன் மற்றும் சிலர்.
ஒருவழியாய் 6 மணியளவில் டோண்டு மற்றும் பாலபாரதி அவர்களின் வருகையால் ஒரு முடிவுக்கு வந்து, இடம் தேடி..ஒரு காதல் ஜோடிகள் ஆக்கிரமித்த தைரியத்தில்,புல்வெளியில் வட்டமிட்டு அமர்ந்தோம்.
நம் சுய அறிமுகத்துடன் ஆரம்பமானது சந்த்திப்பு.
விக்கிப்பீடியாவில் தமிழ் பதிவர்களின் பங்களிப்பு, அதன் அவசியம், நிறை குறைகள்..
தமிழ் காமிக்ஸ்..
எங்கே பிராமணனின் விமர்சனம்..
என நிறைய விவாதித்தாலும், பதிவுலகம் பயமுறுத்தியவாறு இல்லாமல் இனிதே நடந்தது. (இதில் நான், காமேஷ் இருவர் மட்டுமே கன்னிசாமி. ஆமாமா மற்ற எல்லோருமே குருசாமிகள்.)
சாமியேயேயேய் .......
இடையில் புல்வெளியில் அமரக்கூடாது என சில காவலர்கள், கனிவும், கண்டிப்புடனும் கூறியதில், இடம் மாற்றப்பட்டு, சிறு சிறு குழுவாக பிரிய நேர்ந்து.. தொடர்ந்தது.
கேபிள், ஜாக்கி சேகர் போன்றோர் சினிமா கிளைமாக்சில் வரும் போலீஸ் மாதிரி கடைசியில் தரிசனம் தந்தார்கள். நான் கேபிளின் பைக்கிலேயே தொற்றிக்கொண்டு முடிவுரைக்கு (டீக்கடைதான் வேறென்ன) வந்தேன். அப்போதும் நிறைய கிளைமாக்ஸ் போலீஸ் வந்ததால் அவர்களின் பரிச்சயம் தவிர்க்கப்பட்டது உண்மை.
கடைசியில் சுபம்... சுபம்.. சுபம்.
கிளிக்கிய சில..,
(என் கேமரா பாட்டரி தனது சக்தியை இழந்ததில், நிறைய பேர் மிஸ்ஸிங்..) :-(
.
| Posted in
ஹைக்கூ
| Posted on
11:41 AM
காருண்யம்
புகைப்பது தவறென்றான்
மாமிசம் உண்பவன்
இலை சைவம் தானே!
.
| Posted in
ஹைக்கூ
| Posted on
11:41 AM
போதனை
வாத்தியாரால்,
நாத்திகனானான்.
அப்துல்லா!
.