சிவப்ரியன்

ஹைக்கூ - 5

0

| Posted in | Posted on 1:04 AM

காலை தியானத்தால்
கரைந்தே போனது
இலை மீது பனி!
.

அவன் யார்?

2

| Posted in | Posted on 12:56 AM

உறவுகளற்றவன் -ஆனால்
அனாதையில்லை.

அரசியல் பேசுவான்  -ஆனால்
வாக்காளனில்லை.

எல்லாம் தெரிந்தவன் -ஆனால்
ஞானியில்லை.

மதுவிலக்கு பேசுவான் -ஆனால்
மதுவின்றி உறங்காதவன்.

கலாச்சாரம் கூட சொல்வான் -ஆனால்
சாரமற்றவன்.

கிரிக்கெட்டும், சினிமாவும்
சமூகமென்பான்.

குடும்பம்,காதல்,நட்பு -எல்லாம்
வியாபாரமாய்ப் பார்ப்பவன்.

அவன் யார்?
அவன் யார்?

அவன் யாரென,
தேடுபொறியை முடுக்குகிறாயா?
என் அருமை
கணிப்பொறி வல்லுனனே!
.