சிவப்ரியன்

பூக்களுக்கும், உனக்கும்..

0

| Posted in , | Posted on 7:36 PM





ரோட்டோரமாய் பல முறை
ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு.

ஆனால்,
எப்போதும் என் வீட்டு செடிகள்
கருத்தரிக்கும் முன்பே
மரித்துவிடும்!

எப்போதும் சண்டையிடும் உன் கோப விழிகள்
எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள் போல,

ஒருநாள் அதிகாலை - அது
அரிதாய் பூப்படைந்தபோது,
அன்று முழுவதும்
பண்டிகை தினமானது எனக்கு.

ஆம்
என் வீட்டு பூக்களுக்கும்,
உனக்கும் சம்பந்தம் இருக்கிறது!


நன்றி : வார்ப்பு

(இது வார்ப்புவில் வெளியான எனது படைப்பு.)

Comments (0)

கருத்துரையிடுக