| Posted in கவிதை | Posted on 2:03 AM
எட்டாம் வகுப்பில் படிப்பு ஏறல,
அம்மா அதட்டினாள்,
ஒழுங்காய்ப் படி. இல்லேன்னா,
வட்டிக்கடை தான்.
பத்தாம் வகுப்பில் தோல்வி
பக்கத்து வீட்டு மாமாவின்,
கரிசன ஆலோசனை
வட்டிக்கடை.
படித்தவன் பிதற்றினான்,
பாவம் சேர்க்கும் இடங்களில் ஒன்று,
வட்டிக்கடை.
உறுதியாய் மறுத்தேன்
வேண்டாம் - இந்த
வட்டிக்கடை.
வறுமையில் உழைத்தவன்,
கால்வயிறு உணவையும்,
பிடுங்கித் தின்றது
வட்டிக்கடை.
மரணப் படுக்கையிலும்,
தூற்றினாள் ஊர்க்கிழவி
வட்டிக்கடை.
இந்த வருடம் எனக்குக் "கூட்டு"
என்ற நண்பனை,
பாவியென உமிழ்ந்தேன்
காரணம்,
வட்டிக்கடை.
ஆனால்,
கல்லூரிப் படிப்பிற்கென,
அப்பா ஏறி இறங்கினார் நிறைய
வட்டிக்கடை.
வேலை தேடுகையில்,
அன்னையின் தாலியையும்
அபகரித்ததுப் போனது,
வட்டிக்கடை.
மரியாதை நிமித்தம்,
ஊரையும் காலி செய்தோம்
காரணம்,
வட்டிக்கடை.
உடைந்துருகிய தருணத்தில்,
கிடைத்தது, வேலைக்கான கடிதம்.
"வங்கி அதிகாரி,
கடன் வழங்கும் பிரிவு."
இறுதியாய் மறுக்கவில்லை,
வேண்டாம் என - இந்த
வட்டிக்கடை.
Comments (0)
கருத்துரையிடுக